சுமார் 2 மணி நேரம் பெய்த கனத்த மழையில் வெள்ளக்காடாக மாறிய தஞ்சோங் மாலிம், பெஹ்ராங், சிங்காங் கிராமம் கிராமத்சைச் சேர்ந்த 433 பேர், தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த திடீர் வெள்ளத்தினால் மொத்தம் 83 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக மூவாலிம் மாவட்ட இயற்கை பேரிடர் மேலாண்மைக்குழுப் பேச்சாளர் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் நேற்று இரவு 7.30 மணி முதல் கம்போங் சிங்கோங், சமூக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.அப்பகுதியில் பிரதான ஆறான சுங்கை பெஹ்ராங் ஆற்றில் வெள்ளம் கரைப்புரண்டோடி இரு மருங்குகளிலும் நீர் புகுந்ததால் கம்போங் சிங்கோங் கிராமம் வெகுவாக பாதித்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


