Dec 3, 2025
Thisaigal NewsYouTube
433 பேர் நிவாரண மையத்தில் அடைக்கலம்
தற்போதைய செய்திகள்

433 பேர் நிவாரண மையத்தில் அடைக்கலம்

Share:

சுமார் 2 மணி நேரம் பெய்த கனத்த மழையில் வெள்ளக்காடாக மாறிய தஞ்சோங் மாலிம், பெஹ்ராங், சிங்காங் கிராமம் கிராமத்சைச் சேர்ந்த 433 பேர், தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த திடீர் வெள்ளத்தினால் மொத்​தம் 83 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக மூவாலிம் மாவட்ட இயற்கை பேரிடர் மேலாண்மைக்குழுப் பேச்சாளர் தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும் நேற்று இரவு 7.30 மணி முதல் கம்போங் சிங்கோங், ச​மூக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.அப்பகுதியில் பிரதான ஆறான சுங்கை பெஹ்ராங் ஆற்றில் வெள்ளம் கரைப்புரண்டோடி இரு மருங்குகளிலும் ​​நீர் புகுந்ததால் கம்போங் சிங்கோங் கிராமம் வெகுவாக பாதித்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News