சுமார் 2 மணி நேரம் பெய்த கனத்த மழையில் வெள்ளக்காடாக மாறிய தஞ்சோங் மாலிம், பெஹ்ராங், சிங்காங் கிராமம் கிராமத்சைச் சேர்ந்த 433 பேர், தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த திடீர் வெள்ளத்தினால் மொத்தம் 83 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக மூவாலிம் மாவட்ட இயற்கை பேரிடர் மேலாண்மைக்குழுப் பேச்சாளர் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் நேற்று இரவு 7.30 மணி முதல் கம்போங் சிங்கோங், சமூக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.அப்பகுதியில் பிரதான ஆறான சுங்கை பெஹ்ராங் ஆற்றில் வெள்ளம் கரைப்புரண்டோடி இரு மருங்குகளிலும் நீர் புகுந்ததால் கம்போங் சிங்கோங் கிராமம் வெகுவாக பாதித்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்


