சுமார் 2 மணி நேரம் பெய்த கனத்த மழையில் வெள்ளக்காடாக மாறிய தஞ்சோங் மாலிம், பெஹ்ராங், சிங்காங் கிராமம் கிராமத்சைச் சேர்ந்த 433 பேர், தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த திடீர் வெள்ளத்தினால் மொத்தம் 83 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக மூவாலிம் மாவட்ட இயற்கை பேரிடர் மேலாண்மைக்குழுப் பேச்சாளர் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் நேற்று இரவு 7.30 மணி முதல் கம்போங் சிங்கோங், சமூக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.அப்பகுதியில் பிரதான ஆறான சுங்கை பெஹ்ராங் ஆற்றில் வெள்ளம் கரைப்புரண்டோடி இரு மருங்குகளிலும் நீர் புகுந்ததால் கம்போங் சிங்கோங் கிராமம் வெகுவாக பாதித்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


