பத்து பஹாட், மே 08-
பொழுதுபோக்கு மையத்தில் போதைப்பொருளை உட்கொண்டதாக நான்கு அரச மலேசிய சுங்கத்துறை அதிகாரிகள் பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டனர்.
40 வயது நொராஸ்மி முகமது ரஷித், 43 வயது முகமது ருதுவான் யாஹ்யா, 24 வயது முகமது சபிக் பாஸ்மேன் உட்பட 43 வயதுச லேஹுதீன் இட்ரேஸ் ஆகியோர் மாஜிஸ்திரேட்சுஹைலா ஷபியுதீன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 5,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 15 (1) (a) பிரிவின் கீழ் அந்நபர்கள் குற்றச்சாட்டப்படுவர்.
கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி ஜொகூரிலுள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் உல்லாசத்தில் திளைத்திருக்கும் போது போதைப்பொருளை உட்கொண்டதாக அந்நபர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளன.








