Jul 27, 2026
Thisaigal NewsYouTube
விலங்கிடப்படாது குறித்து கேள்வி எழுப்ப வேண்டாம்
தற்போதைய செய்திகள்

விலங்கிடப்படாது குறித்து கேள்வி எழுப்ப வேண்டாம்

Share:

கோலாலம்பூர், மார்ச் 22.

லஞ்ச ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுபட்டுள்ள முன்னள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், தாம் எதிர்நோக்கியுள்ள இதர வழக்கு விசாரணைக்களுக்காக நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படும் போது அவர் ஏன் கைவிலங்கிடப்படவில்லை என்று கேள்வி எழுப்ப வேண்டாம் என்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மத் பத்லி சாரி கேட்டுக்கொண்டார்.

நஜீப் ஏன் கைவிலங்கிடப்படவில்லை என்று ஜெலுத்தோங் டிஏபி எம்.பி. ஆர்எஸ்என் ராயர் சர்ச்சை செய்ய வேண்டியதில்லை என்று அஹ்மத் பத்லி நினைவுறுத்தினார். நீதிமன்றத்திற்கு நஜீப் கொண்டு வரப்படும் போது கைவிலங்கிடப்படாதது, அந்த முன்னாள் பிரதமருக்கு அளிக்கப்படும் சிறப்பு சலுகையா? என்று மக்களவைக்கூட்டத்தில் ஆர்எஸ்என் ராயர் கேள்வி எழுப்பிய போது குறுக்கிட்ட அந்த பாஸ் கட்சி தலைவர் , இந்த வேண்டுகோளை விடுத்தார்.

நஜீப் முன்னாள் பிரதமர் ஆவார். அவர் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டாலும் அவர் பிரத்தியேக சலுகைகளை பெறுவதற்கு உரிமைப்பெற்றுள்ளார். முன்பு, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறைத் தண்டனை அனுபவித்த காலத்தில் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படும் போது அவர் கைவிலங்கிடப்படாததை அஹ்மத் பத்லி சுட்டிக்காட்டினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்