கடந்த 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை தவறான நடத்தையில் ஈடுப்பட்டதற்காக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மிம் 23 பணியாளர்கள் பணிநீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தவறான நடத்தை, பணியில் அலட்சியம், வேலைக்கு வராதது மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது ஆகியவை அந்த பணியாளர்கள் புரிந்த ஒழுக்கக் குற்றங்களாகும் என்று எஸ்.பி.ஆர்.எம். மின் புகார்கள் செயற் குழுப் பிரிவின் தலைவர் டத்தோ டாக்டர் அசரியா மியோர் ஷஹாருடின் தெரிவித்தார்.
அந்த 23 உறுப்பினர்களில், 10 பேர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்றும். ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்களில் பெரும்பாலோர் 10 ஆண்டுகளுக்கும் குறைவாக எஸ்.பி.ஆர்.எம்.மில் பணியாற்றியவர்கள் என்றும் டாக்டர் அசரியா குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


