Jul 27, 2026
Thisaigal NewsYouTube
புதன்கிழமை தொடங்கி 8.4 மில்லியன் மக்களுக்கு ரஹ்மா உதவி தொகை
தற்போதைய செய்திகள்

புதன்கிழமை தொடங்கி 8.4 மில்லியன் மக்களுக்கு ரஹ்மா உதவி தொகை

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 01 -

மக்களுக்கான அரசாங்கத்தின் இரண்டாம் கட்ட ரஹ்மா ரொக்க உதவித் தொகை வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி, புதன்கிழமை மொத்தம் 8.4 மில்லியன் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இம்முறை ரஹ்மா ரொக்க உதவித் தொகை 20 விழுக்காடு அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு 1.26 பில்லியன் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் இவ்வாண்டு 1.5 பில்லியனாக அதிகரித்திருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு பெறுநர்களின் எண்ணிக்கை 9 மில்லியனாக உயர்ந்திருப்பதுடன் 60 சதவீதம் பெரியவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இது அமைவதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

ரஹ்மா ரொக்க உதவி தொகையை மக்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வருவதாக அவர் விளக்கமளித்தார்.

குறிப்பிடப்பட்ட தொகை பெறுநர்களின் வங்கியில் செலுத்தப்படுவதுடன் அந்த உதவி தொகை பேங்க் சிம்ப்பானான் நசியனால் (BSN) வங்கியின் மூலம் கட்டம் கட்டமாக கிடைக்கபெறும் என்று நிதி அமைச்சகத்தின் ஓர் அறிக்கையின் மூலம் பிரதமர் அன்வார் மேலும் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்