Jul 17, 2026
Thisaigal NewsYouTube
இரு லாரிகள் மோதிய விபத்து: கணவர் பலி... 7 மாத கர்ப்பிணி மனைவி காயம்
தற்போதைய செய்திகள்

இரு லாரிகள் மோதிய விபத்து: கணவர் பலி... 7 மாத கர்ப்பிணி மனைவி காயம்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை.17-

சிலாங்கூர் மாநிலம் Sungai Besar அருகே உள்ள Kampung Tebuk Marso பிரதான சாலையில் இன்று அதிகாலை இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 21 வயதுடைய லாரி ஓட்டுநர் உயிரிழந்தார். அவரது 7 மாத கர்ப்பிணி மனைவி லேசான காயமடைந்தார்.

இது குறித்து சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் Ashrul Riezal Asbar கூறுகையில், அதிகாலை 2.49 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, சுங்கை பெசார் நிலையத்திலிருந்து ஆறு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

36 டன் இரும்புக் கம்பிகளை ஏற்றிச் சென்ற லாரியும், கண்டெய்னர் ஏற்றிச் சென்ற மற்றொரு லாரியும் மோதியதில், 26 வயதான கர்ப்பிணி பெண் பொதுமக்களால் மீட்கப்பட்டார்.

ஓட்டுநர் இருக்கையில் சிக்கியிருந்த அவரது கணவர் பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Related News

ஆளுநரின் 85-ஆவது பிறந்த நாள்: பினாங்கில் வர்த்தகப் பிரமுகர்களுக்கு உயரிய விருதுகள் வழங்கி கௌரவிப்பு

ஆளுநரின் 85-ஆவது பிறந்த நாள்: பினாங்கில் வர்த்தகப் பிரமுகர்களுக்கு உயரிய விருதுகள் வழங்கி கௌரவிப்பு

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: கல்வி அமைச்சின் புதிய நடைமுறை

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: கல்வி அமைச்சின் புதிய நடைமுறை

ஜன்னல் வழியே குழந்தையை வீசிய வழக்கு: ரோஹிங்கியா இளம்பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு

ஜன்னல் வழியே குழந்தையை வீசிய வழக்கு: ரோஹிங்கியா இளம்பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு

இரு லாரிகள் மோதிய விபத்து: கணவர் பலி... 7 மாத கர்ப்பிணி மனைவி காயம்

இரு லாரிகள் மோதிய விபத்து: கணவர் பலி... 7 மாத கர்ப்பிணி மனைவி காயம்

ரெப்பாவில் தீ விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ். வீரப்பன் நேரில் சென்று உடனடி நிதியுதவி

ரெப்பாவில் தீ விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ். வீரப்பன் நேரில் சென்று உடனடி நிதியுதவி

13 மசோதாக்கள் நிறைவேற்றம்: நாடாளுமன்ற மக்களவை காலவரையறையின்றி ஒத்திவைப்பு

13 மசோதாக்கள் நிறைவேற்றம்: நாடாளுமன்ற மக்களவை காலவரையறையின்றி ஒத்திவைப்பு