Mar 22, 2026
Thisaigal NewsYouTube
ஜெய்ன் ரய்யான்-னின் பெற்றோரை பிரதிநிதிக்க போவதில்லை என வழக்கறிஞர் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

ஜெய்ன் ரய்யான்-னின் பெற்றோரை பிரதிநிதிக்க போவதில்லை என வழக்கறிஞர் அறிவிப்பு

Share:

டாமான்சாரா, ஜூன் 04-

ஆட்டிசம் குறைபாடு உடைய 6 வயது சிறுவன் ஜெய்ன் ரய்யான் அப்துல் மதியின் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், போலீசின் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டுவரும் அவரது பெற்றோரை இனி தாம் பிரதிநிதிக்க போவதில்லை என வழக்கறிஞர் மஹ்மூத் ஜுமாஅத் தெரிவித்துள்ளார்.

தவிர்க்க முடியாத காரணத்தால் தாம் அம்முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ள அவர், அம்முடிவை எடுத்ததற்கான காரணத்தை விவரிக்கவில்லை.

சிறுவன் ஜெய்ன் ரய்யான் குறித்த மரண விசாரணை, நடப்பிலுள்ள சட்ட நடைமுறையின் கீழ் சுமூகமாக நடைபெற வேண்டும். விசாரணை முறையாக நடைபெறுவதற்கு வழிவிடும் வகையில், அனைத்து தரப்பினர்களும் பல்வேறு ஆருடங்களை முன்வைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென மஹ்மூத் ஜுமாஅத் கேட்டுக்கொண்டார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி, சிலாங்கூர், டாமான்சாரா டாமாய்-லுள்ள அடுக்ககத்திற்கு அருகாமையில் இருந்த கால்வாயில் சிறுவன் ஜெய்ன் ரய்யான் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அது குறித்து விசாரணையை நடத்திவந்த போலீஸ், கடந்த வெள்ளிக்கிழமை அவரது பெற்றோரை விசாரணைக்காக கைது செய்தது.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி