Jul 31, 2026
Thisaigal NewsYouTube
பகாங் மாநில இந்திய தொழில்முனைவோர்களே… இது உங்களுக்கான அரிய வாய்ப்பு!
தற்போதைய செய்திகள்

பகாங் மாநில இந்திய தொழில்முனைவோர்களே… இது உங்களுக்கான அரிய வாய்ப்பு!

Share:

உங்கள் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறீர்களா?

அப்படியானால், மைச்சியின் முத்ரா ரோடுஷோ – நெகிரி பஹாங் நிகழ்வை தவறவிடாதீர்கள்!

அரசாங்கம் வழங்கும் தொழில் நிதியுதவி, மானியங்கள், ஊக்கத்தொகைகள் மற்றும் தொழில் மேம்பாட்டு வாய்ப்புகள் பற்றிய சமீபத்திய தகவல்களை, சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளின் அதிகாரிகளிடமிருந்து நேரடியாக அறிந்து கொள்ளும் சிறந்த வாய்ப்பு!

நாளை ஆகஸ்ட் 1-ஆம் தேதி, சனிக்கிழமை, பிற்பகல் இரண்டு மணி முதல் மாலை ஐந்து மணி வரை, பகாங் மாநிலம், தெமர்லோவில் அமைந்துள்ள ஹோட்டல் கிரீன் பார்க் அரங்கில் இந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அங்கு நீங்கள் நேரடியாக எஸ்எம்இ வங்கி , தெகுன் நேஷனல், அமனா இக்தியார் மலேசியா , பாங்க் ராக்யாட், எஸ்எம்இ கார்ப் மலேசியா, மற்றும் சுருஹான்ஜாயா கொப்பராசி மலேசியா ஆகியோரிடமிருந்து நம்பகரமானத் தகவல்களைப் நேரடியாக பெறலாம்.

இந்த நிகழ்வை பகாங் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை சபை, மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை பேரவைகள் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் நடத்துகிறது.

மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள எண்களை தொடர்புகொள்ளலாம்.

இன்று நீங்கள் எடுக்கும் ஒரு சிறிய முயற்சி… நாளை ஆயிரம் புதிய வாய்ப்புகளுக்கான கதவைத் திறக்கலாம்!

மைச்சியின் முத்ரா ரோடுஷோ – பஹாங் மாநிலம் நிகழ்வில் தவறாமல் கலந்து கொண்டு, உங்கள் வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு புதிய திசையை உருவாக்குங்கள்.

தொடர்பு எண்கள் 018-762 4824 / 010-982 7005

Related News