Jul 28, 2026
Thisaigal NewsYouTube
தீ விபத்தில் 286 பேர் நிவாரண மையத்தில் தங்கியிருத்தல்
தற்போதைய செய்திகள்

தீ விபத்தில் 286 பேர் நிவாரண மையத்தில் தங்கியிருத்தல்

Share:

தாவாவ்,, மார்ச் 7 -

கம்பூங் தன்ஜோங் பாத்து லாவுட் லொக்போன்ட் டில் நிகழ்ந்த தீ விபத்தில் இன்று காலை 8 மணி வரையில் 286 பேர் உள்ளடங்கிய 81 குடும்பங்கள் டேவான் செர்பாகூனா கொம்லேக்ஸ் சுக்கான் தாவாவ் நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவ்விடத்தில் டேவான் ஓதி மொகமாட் ஜந்தான் தன்ஜோங் பாத்து டாராட் என்கிற மற்றொரு நிவாரண மையமும் திறக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் தங்க வைக்கப்படவில்லை என்றும் சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் இன்று ஓர் அறிக்கையில் வெளியிட்டிருந்தது.

குறிப்பிடப்பட்ட இரண்டு நிவாரண மையங்களும் நேற்று இரவு 8 மணியளவில் திறக்கப்பட்டதாகவும் மேலும் வெளியேற்றப்படும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கை கூறியிருந்தது.

முன்னதாக ஊடகங்கள், நேற்று மதியம் 2:30 மணியளவில் கம்பூங் தன்ஜோங் பாத்து லாவுட் லொக்பொன்ட் டில் நிகழ்ந்த தீ விபத்தில் 45 வீடுகள் தீயில் எரிந்து நாசமானதாக செய்தி வெளியிட்டிருந்தன.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்