Jul 27, 2026
Thisaigal NewsYouTube
300 கிலோமீட்டருக்கு மேற்பட்ட பயணங்களுக்கு இரண்டாவது ஓட்டுநர் கொண்டிருக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

300 கிலோமீட்டருக்கு மேற்பட்ட பயணங்களுக்கு இரண்டாவது ஓட்டுநர் கொண்டிருக்க வேண்டும்

Share:

பட்டர்வொர்த், ஏப்ரல் 05-

300 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட பயணத்தை மேற்கொள்ளும் பேருந்தில், இரண்டாவது ஓட்டுநர் இருப்பதை விரைவு பேருந்து நிறுவனங்கள் உறுதிபடுத்த வேண்டுமென பினாங்கு சாலைப் போக்குவரத்து துறை ஜேபிஜே-யின் தலைமை இயக்குநர் ஸுல்கிபிலி இஸ்மாயில் வலியுறுத்தினார்.

அத்துடன், 4 மணி நேரத்திற்கும் மேற்பட்ட பயணங்களுக்கும் அந்த நிபந்தனை பொருந்தும். நீண்ட நேரம் பேருந்தை செலுத்தும் ஓட்டுநர்களுக்கு போதிய ஓய்வு கிடைக்கும் என்பதோடு, அதில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த முடியும். உயிரிழப்பு உட்பட விபத்துகளையும் குறைக்க முடியும் என்றாரவர்.

பெரும்பாலான விரைவு பேருந்து நிறுவனங்கள் அந்த நிபந்தனையைப் பின்பற்றுவதில்லை. கேட்டால், அடுத்த பேருந்து முனையத்திலிருந்து இரண்டாவது ஓட்டுநர் பேருந்தை செலுத்துவார் என காரணம் கூறுகின்றனர். அது சரியல்ல. பயணம் தொடங்கும் போதே, இரண்டாவது ஓட்டுநரும் பேருந்தில் இருப்பது கட்டாயம் என்று ஸுல்கிபிலி இஸ்மாயில் கூறினார்.

அந்த நிபந்தனையை பின்பற்றாத பேருந்து நிறுவனங்கள், போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு தடை விதிக்கப்படும் எனவும் ஸுல்கிபிலி இஸ்மாயில் எச்சரிக்கை விடுத்தார்.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்