May 22, 2026
Thisaigal NewsYouTube
300 கிலோமீட்டருக்கு மேற்பட்ட பயணங்களுக்கு இரண்டாவது ஓட்டுநர் கொண்டிருக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

300 கிலோமீட்டருக்கு மேற்பட்ட பயணங்களுக்கு இரண்டாவது ஓட்டுநர் கொண்டிருக்க வேண்டும்

Share:

பட்டர்வொர்த், ஏப்ரல் 05-

300 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட பயணத்தை மேற்கொள்ளும் பேருந்தில், இரண்டாவது ஓட்டுநர் இருப்பதை விரைவு பேருந்து நிறுவனங்கள் உறுதிபடுத்த வேண்டுமென பினாங்கு சாலைப் போக்குவரத்து துறை ஜேபிஜே-யின் தலைமை இயக்குநர் ஸுல்கிபிலி இஸ்மாயில் வலியுறுத்தினார்.

அத்துடன், 4 மணி நேரத்திற்கும் மேற்பட்ட பயணங்களுக்கும் அந்த நிபந்தனை பொருந்தும். நீண்ட நேரம் பேருந்தை செலுத்தும் ஓட்டுநர்களுக்கு போதிய ஓய்வு கிடைக்கும் என்பதோடு, அதில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த முடியும். உயிரிழப்பு உட்பட விபத்துகளையும் குறைக்க முடியும் என்றாரவர்.

பெரும்பாலான விரைவு பேருந்து நிறுவனங்கள் அந்த நிபந்தனையைப் பின்பற்றுவதில்லை. கேட்டால், அடுத்த பேருந்து முனையத்திலிருந்து இரண்டாவது ஓட்டுநர் பேருந்தை செலுத்துவார் என காரணம் கூறுகின்றனர். அது சரியல்ல. பயணம் தொடங்கும் போதே, இரண்டாவது ஓட்டுநரும் பேருந்தில் இருப்பது கட்டாயம் என்று ஸுல்கிபிலி இஸ்மாயில் கூறினார்.

அந்த நிபந்தனையை பின்பற்றாத பேருந்து நிறுவனங்கள், போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு தடை விதிக்கப்படும் எனவும் ஸுல்கிபிலி இஸ்மாயில் எச்சரிக்கை விடுத்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு