Jun 30, 2026
Thisaigal NewsYouTube
பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்
தற்போதைய செய்திகள்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

Share:

நெல் விவசாயிகள் அறுவடைக்காகக் காத்திருக்கும் காலத்திற்கான 600 ரிங்கிட் இடைக்கால உதவித்தொகை வழங்குவதில் எவ்வித தாமதமும் இல்லை என விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்த 600 ரிங்கிட் உதவித்தொகையானது 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுக்கான நெல் சாகுபடி பருவத்திற்காக சிறப்பாக அறிவிக்கப்பட்ட 'ஒரே முறை' வழங்கப்படும் முன்முயற்சியாகும்.

2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டங்களில் இந்த உதவித்தொகைக்கான நிதி ஒதுக்கீடு தொடரப்படவில்லை என்பதை அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த இரண்டு பருவங்களாக விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையில் நிலுவை இருப்பதாகக் கூறப்படும் புகார்களை அமைச்சு மறுத்துள்ளது. எதிர்க்கட்சிகள் கூறுவது போல அலவன்ஸ்களில் எந்தத் தாமதமும் ஏற்படவில்லை என்று அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News