Mar 19, 2026
Thisaigal NewsYouTube
வாகனங்களை முந்தி செல்லப்பட்ட போது விபத்து, மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

வாகனங்களை முந்தி செல்லப்பட்ட போது விபத்து, மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழப்பு

Share:

கோத்தா பாரு, ஏப்ரல் 12-

கிளந்தான், பாசிர் புத்தே, கெடாய் பஹுலு கம்போங் டனான் அருகிலுள்ள ஜாலான் கோத்தா பாரு- கோலா திரங்கானு-வில் வாகனங்களை முந்தி செல்ல முற்பட்ட போது நிகழ்ந்த சாலை விபத்தில், மோட்டார்சைக்கிளோட்டி, கார் மோதி உயிரிழந்தார்.

நேற்று மாலை மணி 2 அளவில், சாலை நெரிசலில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்தால், 23 வயதுடைய அந்த இளைஞர் தனது Y15 ZR ரக மோட்டார்சைக்கிளில் பல வாகனங்களை முந்தி செல்ல முற்பட்டதாக தெரியவந்துள்ளது.

அப்போது, ஒரு வாகனம் திடிரென வலது பக்கம் வளைந்ததில், அந்த வாகனத்தை தவிர்க்க முடியாமல் வலது முன்பக்கம் மோதிய அவர், பின்னர் எதிர்திசையில் தூக்கியெறியப்பட்டதாக அறியப்படுகிறது.

பாசிர் புத்தே-வை நோக்கி வந்துக்கொண்டிருந்த அக்கார் இளைஞனை மோதியதோடு, சில தூரம் அவரை இழுத்து சென்றதால் கடும் காயங்களுக்கு இலக்கான அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, பாசிர் புத்தே மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் சய்சூழ் ரிசால் சக்கரியா கூறினார்.

Related News