Mar 18, 2026
Thisaigal NewsYouTube
மூத்த குடிமக்களுக்கு தலா 200 வெள்ளி வழங்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

மூத்த குடிமக்களுக்கு தலா 200 வெள்ளி வழங்கப்பட்டது

Share:

சிரம்பான், மார்ச் 4 -

சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் P. குணசேகரன், தனது தொகுதியில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு நெகிரி செம்பிலான் மாநில அரசின் சும்பாங்கான் கெசெரியான் தாஹுனான் திட்டத்தின் கீழ் தலா 200 வெள்ளி ரொக்க உதவித்தொகுதியை வழங்கினார்.

கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் சும்பாங்கான் கெசெரியான் தாஹுனான் உதவித் திட்டத்தில் தங்களை பதிவு செய்து கொண்ட 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித் தொகை இரண்டாவது ஆண்டாக வழங்கப்படுகிறது..

அந்த வகையில் சிரம்பான் ஜெயா, சமூக மண்டபத்தில் தனது சட்டமன்றத் தொகுதியில் கடந்த ஆண்டு 154 பேருக்கு தலா 200 வெள்ளி உதவித் தொகை வழங்கப்பட்ட வேளையில் இவ்வாண்டு 597 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதன் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தெரிவித்தார்.

அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் 70 வயதை கடந்தவர்கள், இந்த உதவித் தொகையை பெறுவதற்கான கால அவகாசம் இம்மாதம் 31 ஆம் தேதி வரையில் திறக்கப்பட்டு இருப்பதையும் குணசேகரன் சுட்டிக்காட்டினார்.

70 வயதை கடந்தவர்கள், எந்த சட்டமன்றத் தொகுதியில் தங்களை வாக்காளராக பதிவு செய்து கொண்டுள்ளார்களோ, அந்த தொகுதியின் சேவை மையத்தில் தங்களை பதிவு செய்து, கொண்டு இந்த 200 வெள்ளி உதவித் தொகையை பெறலாம் என்று குணசேகரன் குறிப்பிட்டார்.

Related News