கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு பரிந்துரைக்கும் பொது மன்னிப்பு வாரியத்தின் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பியது தொடர்பில் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு எதிராக புக்கிட் அமான் போலீசார் நடத்திய விசாரணையின் அறிக்கை இன்று சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தள்ளார்.
மேற்கொண்டு எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைக்காக அந்த அறிக்கையை சட்டத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த மாதம் ஜோகூர், மூவார், பக்ரி யில் நடைபெற்ற செராமா வில் உரைநிகழ்த்திய அப்துல் ஹாடி அவாங், கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க பரிந்துரைக்கும் ஆட்சியாளர்களின் அதிகாரத்தின் கீழ் உள்ள பொது மன்னிப்பு வாரியத்தின் அதிகாரம் குறித்து விமர்சனம் செய்து இருந்ததாக கூறப்படுகிறது.

Related News

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு


