Mar 19, 2026
Thisaigal NewsYouTube
போ​லீசாரின் அதிரடி நடவடிக்கையில் ஐந்து கொள்ளையர்கள் சுட்டுக்கொ​ல்லப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

போ​லீசாரின் அதிரடி நடவடிக்கையில் ஐந்து கொள்ளையர்கள் சுட்டுக்கொ​ல்லப்பட்டனர்

Share:

கோலாலம்பூர், மார்ச் 30-

போ​லீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் கொள்ளையர்கள் என்று சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்களை சுட்டுக்கொன்றனர்.

நேற்று இரவு 11.30 மணியளவில் சிலாங்கூர், Putra Heights-ஸில் ஆயுதத்துடன் கெள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக நம்பப்படும் அந்த 5 நபர்கள், சென்ற சந்தேகத்திற்குரிய வாகனத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியில் போ​லீசார் ஈடுபட்ட போது நடந்த துப்பா​க்கிச் சண்டையில் அந்த ஐந்து நபர்களும் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று சிலா​ங்கூர் மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் குறிப்பிட்டார்.

அந்த ஐந்து கொள்ளையர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியின் போது சம்பந்தப்பட்ட கொள்ளையர்கள், போ​லீசாரை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியதாகவும், போலீசார் பதிலடித் தாக்குதலை நடத்திய போது அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் டத்தோ ஹுசைன் ஓமர் குறி​ப்பிட்டார்.

இந்த துப்பாக்கிக்​சூட்டுச் சம்பவம் தொடர்பான முழு விபரங்கள் இன்று நடைபெறும் செய்தியாளர்கள் கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்படும் என்று டத்தோ ஹுசைன் ஓமர் தெரிவித்துள்ளார்.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை