Con Dao கடல் பகுதியில் வணிகக் கப்பல் கவிழ்ந்த சம்பவத்தில் அதில் பணி புரிந்து வந்த மலேசியர் ஒருவர் காப்பாற்ற[[அட்டு பாதுகாப்பாக இருப்பதாக வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அக்கப்பலில் பணி புரியும் அந்த மலேசியருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு பாதுகாப்பாக இருப்பதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து அமைச்சு அனுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும், உரிய உதவியை வெகு சீக்கிரம் செய்ய ஆவண செய்வதாகவும் கூறப்பட்டது.








