ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பூலாய் தொகுதியில் 61 வாக்களிப்பு மையங்களும், சிம்பாங் ஜெராம் தொகுதியில் 14 மையங்களும் வாக்களிப்புக்காக திறக்கப்பட்டன. காலையில் வானிலை நன்றாக இருந்த போதிலும் மதியம் மேகமூட்டமாக இருந்தது.மலேசிய வானிலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. மதியம் 12 மணி வரையில் இவ்விரு தொகுதிகளிலும் 30 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் முடிவு இரவு 9 மணிக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related News

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்


