Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பூலாய் மற்றும் சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தல் வாக்ளிப்பு தொடங்கியது
தற்போதைய செய்திகள்

பூலாய் மற்றும் சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தல் வாக்ளிப்பு தொடங்கியது

Share:

ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி​ மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பூலாய் தொகுதியில் 61 வாக்களிப்பு மையங்களும், சிம்பாங் ஜெராம் தொகுதியில் 14 மையங்களும் வாக்களிப்புக்காக திறக்கப்பட்டன. காலையில் வானிலை நன்றாக இருந்த போதிலும் மதியம் மேக​மூட்டமாக இருந்தது.மலேசிய வானிலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. மதியம் 12 மணி வரையி​ல் இவ்விரு தொகுதிகளிலும் 30 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் முடிவு இரவு 9 மணிக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேர்த​ல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related News