ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பூலாய் தொகுதியில் 61 வாக்களிப்பு மையங்களும், சிம்பாங் ஜெராம் தொகுதியில் 14 மையங்களும் வாக்களிப்புக்காக திறக்கப்பட்டன. காலையில் வானிலை நன்றாக இருந்த போதிலும் மதியம் மேகமூட்டமாக இருந்தது.மலேசிய வானிலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. மதியம் 12 மணி வரையில் இவ்விரு தொகுதிகளிலும் 30 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் முடிவு இரவு 9 மணிக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்


