Mar 18, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் இரண்டு முதியவர்கள் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

விபத்தில் இரண்டு முதியவர்கள் உயிரிழந்தனர்

Share:

ஜோகூர், மார்ச் 4 -

ஜோகூர், குளுவாங்கில் ஜாலான் க்லுவாங் டெக் வா ஹெங் சாலையின் 27 ஆ வது கிலோ மீட்டரில் இரண்டு வாகனங்கள் எதிரும் புதிருமாக மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 2.48 மணியளவில் அந்த குறுகளான சாலையில் நிகழ்ந்தது. மெர்சிடிஸ் பென்ஸ் ஓட்டுநரான 71 வயது முதியவரும், தொயொத்தா ஹைலாக் ஓட்டுநருமான 74 வயது நபரும் தலையில் பலத்த காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் னிக் மொகமட் அச்மி ஹுசின் தெரிவித்தார்.

லாயாங் -லாயாங் கிலிருந்து ரெங்காம் நோக்கி சென்று கொண்டிருந்த மெர்சிடிஸ் பென்ஸ் வழித்தடத்தில், திடீரென்று நுழைந்த தொயாத்த ஹைலாக் வாகனம் எதிரும் புதிருமாக மோதியதாக அவர் குறிப்பிட்டார். இச்சம்பவம் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக னிக் மொகமட் அஸ்மி குறிப்பிட்டார்.

Related News