கோலாலம்பூர், ஜூன்.14-
மலாக்காவில் கடந்த வியாழக்கிழமை எஸ்பிஎம் தேர்வெழுதும் மாணவரையும் அவரது தாயாரையும் உட்படுத்திய கொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த கல்வி அமைச்சு முழுமையாக அதிகாரத்துவத்தினரிடம் ஒப்படைத்துள்ளது. அதே சமயம், காயமடைந்த மற்றொரு பாதிக்கப்பட்டவருக்கும் அவரின் குடும்பத்திற்கும் இத்துயரமான நேரத்தில் ஆதரவு அளிப்பதில் அமைச்சு தற்போது கவனம் செலுத்துகிறது என்று கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடேக் கூறினார்.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து பல ஊகங்கள் நிலவி வருவதாகவும், குடும்பத்தின் நலன் குறித்து தொடர்ந்து தமது தரப்பு கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.








