லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள சபா அம்னோ தலைவரும், கினாபாத்தாங்ஙான் நாடாளுமன்ற உறுப்பினருமான புங் மொக்தார் ராடின் மற்றும் அவரின் மனைவி சிசி இசெட் சாமாட் ஆகிய இருவருவரின் விடுதலையை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.
15 கோடி வெள்ளி மதிப்புள்ள ஃபெல்க்ரா முதலீட்டு திட்டம் தொடர்பில் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட இத்தம்பதியரை கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்தது.
அவ்விவருவரையும் எதிர்வாதம் செய்ய அழைத்தது மூலம் நீதிமன்றம் தவறு இழைத்து இருப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதி அசார் அப்துல் ஹமிட் தீர்ப்பு அளித்து இருந்தார்.
15 கோடி வெள்ளி முதலீட்டில் Public Mutual யூனிட் டிரஸ்ட் பங்குகளை ஃபெல்க்ரா வாங்குவதற்கான அனுமதியை பெற்று தருவதற்கு 22 லட்சம் வெள்ளியையும், 2 லட்சத்து 62 ஆயிரத்து 500 வெள்ளியையும் லஞ்சமாக பெற்றதாக 65 வயதான புங் மொக்த்தார் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார். அவரின் இந்த செயலுக்கு உடந்தையாக இருந்ததாக அவரின் மனைவி சிசி இசெட் சாமாட் இசெட் சாமாட்டும் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

Related News

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்


