அடுத்து நடைபெறவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் ஜசெக உடன் கூட்டணி அமைக்கப்பட்டால், தாம் அரசியலில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் அக்மல் சாலே எச்சரித்துள்ளார்.
மலாக்காவில் ஜசெகவுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான எந்தவொரு முடிவும் தமக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
அம்னோ மற்றும் பாரிசான் நேஷனல் தங்களது சொந்த அரசியல் கொள்கைகளையும் அடித்தளத்தையும் பாதுகாத்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அக்மல் சாலே வலியுறுத்தியுள்ளார்.
மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளிடையே கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அக்மல் சாலேயின் இந்த எச்சரிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள








