கோலாலம்பூர் மாநகரில் கடந்த சனிக்கிழமை பிற்பகலில் நடந்த சட்டவிரோதப் பேரணியில் , அந்நிகழ்வை வழிநடத்தியதாக நம்பப்படும் 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடீன் பிச்சை தெரிவித்தார்.
போலீசாரின் உத்தரவையும் மீறி நடந்த இந்தப் பேரணி தொடர்பில் 22 பேருடன் போலீசார் தொடர்பு கொண்ட வேளையில் இன்னும் அறுவர் தேடப்பட்டு வருவதாக அயோப் கான் குறிப்பிட்டார்.துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட்டிற்கு எதிரான 47 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டதைத் எதிர்த்து இந்த பேரணி கூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.







