Mar 18, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோத 'ஹலால்' சின்னங்களை பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத 'ஹலால்' சின்னங்களை பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல்

Share:

தைப்பிங், மார்ச் 22.

தைப்பிங்கில் உள்ள ஒரு வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது சட்டவிரோதமாக 'ஹலால்' சின்னத்தை பயன்படுத்தி வியாபாரம் செய்ததற்காக 208 உணவு பொருட்களை பேரா, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவினங்களின் அமைச்சகம் பறிமுதல் செய்தனர்.

நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் பெருசாஹான் ரிங்கான் துப்பாய் பகுதியில் தைப்பிங் கே.பி.டி.என் - னை சேர்ந்த அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட இச்சோதனையில் அப்பொருட்கள் கண்டறியப்பட்டதாக அதன் இயக்குநர் டத்தோ கமாலுடின் இஸ்மாயில் தெரிவித்தார்.

குறிப்பிடப்பட்ட வளாகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான 'ஹலால்' சரிபார்ப்பு சான்றிதழ் கடந்த 2008 ஆம் ஆண்டிலேயே காலாவதியான நிலையில் அவ்வளாகங்கள் இன்னமும் பொருட்களை பேக்கேஜிங் பாக்கெட்டுகளில் விநியோகம் செய்யப்பட்டதாக கமாலுடின் இஸ்மாயில் ஓர் அறிக்கையில் இன்று கூறினார்.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு 5 லட்சம் வரையில் அபராதம் மற்றும் இரண்டாவது அல்லது அடுத்தடுத்த குற்றத்திற்காக ஒரு மில்லியன் வரையில் அபராதம் விதிக்கப்படும் என்று கமாலுடின் இஸ்மாயில் அறிவித்தார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை