Mar 18, 2026
Thisaigal NewsYouTube
விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்தில்
தற்போதைய செய்திகள்

விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்தில்

Share:

கோலாலம்பூர், மார்ச் 8 -

இஸ்லாத்தின் மேன்மை தற்காக்கப்பட வேண்டும் என்ற தலைப்பில் ஆட்சியாளர்களை மறைமுகமாக சிறுமைப்படுத்தும் தன்மையிலான அறிக்கையை வெளியிட்டதாக கூறப்படும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை மேல் நடவடிக்கைக்காக சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ராசாருடின் ஹூசேன் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி அகப்பக்கம் ஒன்றில் அப்துல் ஹாடி அவாங் பதிவேற்றம் செய்த ஓர் அறிக்கை தொடர்பில் அவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

மாராங் எம்.பி.யான அப்துல் ஹாடி அவாங், 1948 ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டம் மற்றும் 1998 ஆம் ஆண்டு தகவல், பல்லூடக் சட்டம் ஆகியவற்றின் கீழ் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தான் ஶ்ரீ ராசாருடின் தெரிவித்தார்.

Related News

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது