Mar 20, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக போலீஸ் புகார்
தற்போதைய செய்திகள்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக போலீஸ் புகார்

Share:

வருமான வரியை, தாம் செலுத்தவில்லை என்று கூறி காணொளி வெளியிட்டதாக கூறப்படும் டிஏபி- யின் முன்னாள் அரசியல்வாதி சதீஸ் முனியாண்டிக்கு எதிராக ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி போலீஸ் புகார் செய்துள்ளார்.

பினாங்கு , பாகான் டாலாம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சதீஸ் முனியாண்டி, தமக்கு எதிரான குற்றச்சாட்டை, காணொளி வழி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளதாக சரஸ்வதி கந்தசாமி குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு எதிராக கூறப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை ஆராயாமல் ஒரு லட்சத்து 90 ஆயிரம் வெள்ளி வருமான வரியை செலுத்தாமல் தாம் இருந்து வருவதாக கூறி, வாட்சப்- பிலும் ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் குறிப்பட்டார்.

ஒற்றுமை அரசாங்கத்தை சேர்ந்த ஓர் அரசியல்வாதி மற்றும் துணை அமைச்சர் என்ற முறையில் தமது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் தீய நோக்குடன் இத்தகைய பொய்யான செய்திகள் பகிரப்பட்டு வருவதாக சரஸ்வதி கந்தசாமி குற்றஞ்சாட்டினார்.

துணை அமைச்சர் சரஸ்வதி நேற்று மாலை 3.45 மணியளவில் போலீஸ் புகார் செய்து இருப்பதை புத்ராஜயா மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்மதி அப்துல் அஜீஸ் இன்று உறுதிபடுத்தினார். இப்புகார், குற்றவியல் சட்டம் 500 ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து