May 22, 2026
Thisaigal NewsYouTube
அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை
தற்போதைய செய்திகள்

அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை

Share:

கோலாலம்பூர், மஅர்ச் 5 -

கோலாலம்பூர், ஜாலான் சியட் புத்ரா வில் உள்ள ஆம்பூலன்ஸ் இன்சாப் மலேசியா வளாகத்திற்கு அருகே இன்று காலை 8 மணியளவில் ராப்பிட் கெல் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் பழைய கிள்ளான் சாலையை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று பேருந்து தீ பிடித்து எரிந்து சாலையோரத்தில் நிறுத்தியதாக தெரியவந்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படாமல் உயிர் தப்பியதாக கூறப்படுகின்றது.

இதுக்குறித்து, தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்திற்கு கிடைக்கபெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உட்பட வாகனங்கள் அவ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தீயணைப்பு, மீட்புப்படைதுறையின் செய்தி தொடர்பாளர் அறிவித்தார்.

90 சதவீதம் பேருந்து தீயில் பாதிக்கப்பட்டிருப்பதாக தீயணைப்பு, மீட்புப்படைதுறையின் தலைவர் மொகாமட் சுஹைமி மொகாமாட் ரசாலி மேலும் குறிப்பிட்டார்.

Related News

அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை | Thisaigal News