Mar 20, 2026
Thisaigal NewsYouTube
இரு ஹெலிகப்டர்களை உட்படுத்திய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இறுதி மரியாதை
தற்போதைய செய்திகள்

இரு ஹெலிகப்டர்களை உட்படுத்திய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இறுதி மரியாதை

Share:

லுமுட், ஏப்ரல் 24-

பெராக், லுமுட், மலேசிய கடற்படை தளத்தில், நேற்று மேற்கொள்ளப்பட்ட ஒத்திகையின் போது, இரு ஹெலிகப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்ட கோர விபத்தில் உயிரிழந்த 10 பேரில் எண்மரது சடலங்கள், ஜாலான் தம்புனிலுள்ள அரச மலேசிய மலாய் இராணுவ படையின் BATOLION 23-க்கு இன்று பிரார்த்தனைக்காக கொண்டுவரப்படவுள்ளது.

தற்போது, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுவரும் உடற்கூறு ஆய்வு பணிகள், இன்று மாலை மணி 2 அளவில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சம்பந்தப்பட்ட எண்மரது சடலங்களுக்கு சலாஹுத்தீன் அல் அயூபி பள்ளிவாசலில் பிரார்த்தனையும் இறுதி மரியாதையும் செய்தப் பின்னர், அடக்கம் செய்வதற்காக, அவர்களது சொந்த ஊர்களுக்கு பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

மேலும், விபத்தில் உயிரிழந்த Skuadron 502 ஹெலிகப்டர் விமானியான லெப்டனன் தி. சிவசுதனின் நல்லுடல் சித்தியவானிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது.

Related News

மலேசியாவின் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களின் எதிரொலியே - ஆய்வாளர்கள் கருத்து

மலேசியாவின் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களின் எதிரொலியே - ஆய்வாளர்கள் கருத்து

ஷா ஆலாமில் கோலாகலம்: சிலாங்கூர் மாநில அளவிலான உகாதி புத்தாண்டு கொண்டாட்டம்

ஷா ஆலாமில் கோலாகலம்: சிலாங்கூர் மாநில அளவிலான உகாதி புத்தாண்டு கொண்டாட்டம்

அஸ்தி கலசங்கள் திருட்டு: கம்போடியா 'ஸ்கேம்' கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் / நிர்வாணா சந்தேகம்

அஸ்தி கலசங்கள் திருட்டு: கம்போடியா 'ஸ்கேம்' கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் / நிர்வாணா சந்தேகம்

பினாங்கு முதியோர் இல்லத்தில் பூத்த புதுக்காதல்: 91 வயது மணமகள் - 67 வயது மணமகன்

பினாங்கு முதியோர் இல்லத்தில் பூத்த புதுக்காதல்: 91 வயது மணமகள் - 67 வயது மணமகன்

அவசரகாலப் பாதை விதிமீறல்: ட்ரோன்கள் மூலம் அதிரடி வேட்டையில் சாலைப் போக்குவரத்துத்து

அவசரகாலப் பாதை விதிமீறல்: ட்ரோன்கள் மூலம் அதிரடி வேட்டையில் சாலைப் போக்குவரத்துத்து

ஜோகூர் கத்திக்குத்து சம்பவம்: வெளிநாட்டினர் 5 பேர் கைது

ஜோகூர் கத்திக்குத்து சம்பவம்: வெளிநாட்டினர் 5 பேர் கைது