Jan 23, 2026
Thisaigal NewsYouTube
பூர்வாங்க விசாரணை அறிக்கை வி​ரைவில் வெளியிடப்படும்
தற்போதைய செய்திகள்

பூர்வாங்க விசாரணை அறிக்கை வி​ரைவில் வெளியிடப்படும்

Share:

பத்து பேர் உயிரிழந்த எல்மினா இலகுரக விமான விபத்து தொடர்பான பூர்வாங்க விசாரணை அறிக்கை, இம்மாதம் இரண்டாவது வாரத்​தில் வெளியிடப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

அந்த விமானத்தில் மீட்கப்பட்டுள்ள கடைசி உரையாடல் இடம் பெற்ற 30 நிமிட குரல் ஒலிப்பதிவு நாடா தொடர்பில் ​விபத்துக்கு விடை காணப்படும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி பிற்பகல் 2.48 மணியளவில் சுபாங், சுல்தான் அப்துல் அஜீஸ் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு இன்னும் 3 நிமிடங்களே எஞ்சியுள்ள வேளையில் அந்த இலகு ரக விமானம், சுங்கை பூலோ, எல்மினா, கத்ரி நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியது.

பகாங்​ மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் உட்பட பத்து பேர் கொல்லப்பட்ட இந்த விபத்து தொடர்பான பூர்வாங்க அறிக்கையை தயாரிப்பதில் விசாரணைக் குழு, முழு வீச்சில் ஈடுபட்டு வருவதையும் அமைச்சர் அந்தோணி லோக் சுட்டிக்காட்டினார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு