Mar 20, 2026
Thisaigal NewsYouTube
காரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக உணவு விற்பனையாளர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

காரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக உணவு விற்பனையாளர் மீது குற்றச்சாட்டு

Share:

மூன்று முறை சிறுமியை காரில் பாலியல் பலாத்காரம் செய்ததாக உணவு விற்பனையாளர் ஒருவர் மூவார் மாஜிஸ்ட்ரெட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

23 வயது முகமது அலிஃப் சுகிமான் என்கிற அந்த உணவு விற்பனையாளர் மாஜிஸ்திரேட் ஃபாடின் தலிலா காலித் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, மூன்று குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படி விதிக்க குற்றவியல் சட்டம் 376 (1) பிரிவின் கீழ் அந்நபருக்கு தண்டனை விதிக்கப்படும்.

கடந்த மார்ச் 13 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் ஜாலான் தெங்கு பெந்தஹாரா அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக முதல் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கடந்த மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 1 ஆம் தேதிகளில் இரவு 9.30 மற்றும் நள்ளிரவு 1.30 மணியளவில் தனது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டாம் மற்றும் மூன்றாம் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து