மூன்று முறை சிறுமியை காரில் பாலியல் பலாத்காரம் செய்ததாக உணவு விற்பனையாளர் ஒருவர் மூவார் மாஜிஸ்ட்ரெட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.
23 வயது முகமது அலிஃப் சுகிமான் என்கிற அந்த உணவு விற்பனையாளர் மாஜிஸ்திரேட் ஃபாடின் தலிலா காலித் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, மூன்று குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படி விதிக்க குற்றவியல் சட்டம் 376 (1) பிரிவின் கீழ் அந்நபருக்கு தண்டனை விதிக்கப்படும்.
கடந்த மார்ச் 13 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் ஜாலான் தெங்கு பெந்தஹாரா அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக முதல் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கடந்த மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 1 ஆம் தேதிகளில் இரவு 9.30 மற்றும் நள்ளிரவு 1.30 மணியளவில் தனது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டாம் மற்றும் மூன்றாம் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








