Mar 24, 2026
Thisaigal NewsYouTube
நெடுஞ்சாலைகளில் 28 லட்சம் வாகனங்கள்: மீண்டும் நகரங்களுக்குத் திரும்பும் மக்கள்
தற்போதைய செய்திகள்

நெடுஞ்சாலைகளில் 28 லட்சம் வாகனங்கள்: மீண்டும் நகரங்களுக்குத் திரும்பும் மக்கள்

Share:

நோன்புப் பெருநாள் விடுமுறை முடிந்து இன்று ஒரே நாளில் சுமார் 28 லட்சம் வாகனங்கள் முக்கிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் என மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM கணித்துள்ளது. இது இந்த ஆண்டு பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

வடக்கே பெர்மாத்தாங் பாவ் மற்றும் ஈப்போ இடையிலும், தெற்கே ஆயர் ஈத்தாம் மற்றும் பெடாஸ் லிங்கி பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. அதேபோல், காராக் நெடுஞ்சாலையிலும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.

நெரிசலைக் குறைக்க நாடு முழுவதும் 21 இடங்களில் 'ஸ்மார்ட் லேன்' வழித்தடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுவரை பெரிய விபத்துகள் ஏதும் இன்றி போக்குவரத்து தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று LLM குறிப்பிட்டுள்ளது.

Related News