May 22, 2026
Thisaigal NewsYouTube
Goodyear மூடப்படுவதை தடுக்க நடவடிக்கை தேவை
தற்போதைய செய்திகள்

Goodyear மூடப்படுவதை தடுக்க நடவடிக்கை தேவை

Share:

கோலாலம்பூர், மார்ச் 7 -

நாட்டின் முதன்மை டயர் தயாரிப்பு தொழிற்சாலையான ஷா ஆலாமில் உள்ள கூட்யேர் தொழிற்சாலை மூடப்படுவது குறித்து அரசாங்கம் உடனடியாக ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் அனைத்துலக வாணிப, தொழில்துறை அமைச்சரான டான்ஸ்ரீ ரபிடா அஸிஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஷா ஆலமில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் கூட்யேர் மூடப்படுவதும், அதானல் 550 தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு ஆளாகுவதும் குறித்து இன்று வெளியான செய்தி தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக ரபிடா குறிப்பிட்டார்.

மலேசிய தொழில்துறையில் ஒரு பழமையான நிறுவனமான கூர்யேர் மூடப்படுவதற்கான உண்மையான காரணங்களை அரசாங்கம் ஆராய வேண்டும் என்று முன்னாள் மூத்த அமைச்சரான ரபிடா வலியுறுத்தினார்.

Related News