Jun 25, 2026
Thisaigal NewsYouTube
"பக்காத்தான் - பாரிசான் இடையே பிளவை ஏற்படுத்துகிறாரா கைரி?" - பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவர் கேள்வி
தற்போதைய செய்திகள்

"பக்காத்தான் - பாரிசான் இடையே பிளவை ஏற்படுத்துகிறாரா கைரி?" - பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவர் கேள்வி

Share:

முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரான கைரி ஜமாலுடின் சமீபத்தில் PKR குறித்து முன்வைத்த விமர்சனங்கள், தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள பக்காத்தான் ஹரப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணிகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியாகத் தோன்றுவதாக பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவர் ஃபராஹிதா ஃபௌசி தெரிவித்துள்ளார்.

கைரியின் கருத்துகளின் பின்னணி சந்தேகத்துக்குரியது என்றும், அவை இரு கூட்டணிகளுக்கிடையேயான அரசியல் சூழ்நிலையை விமர்சகர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை உருவாக்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது கருத்துக்கள், பக்காத்தானை, பாரிசானுக்கு எதிராக நிறுத்தும் விதமாக உள்ளன என்றும் ஃபராஹிதா தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழலில், நிலைத்தன்மையும் முதிர்ச்சியான ஒத்துழைப்பும் தேவைப்படுகின்ற இந்த நேரத்தில், இத்தகைய கருத்துகள் சரியானவை அல்ல என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் ஃபராஹிதா குறிப்பிட்டுள்ளார்.

Related News