Jul 31, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனிசியாவில் 70,000-க்கும் மேற்பட்ட எக்ஸ்டசி மாத்திரைகளுடன் மலேசிய விமானி கைது
தற்போதைய செய்திகள்

இந்தோனிசியாவில் 70,000-க்கும் மேற்பட்ட எக்ஸ்டசி மாத்திரைகளுடன் மலேசிய விமானி கைது

Share:

இந்தோனேசியாவின் சூக்கரனோ-ஹட்டா விமான நிலையத்தில், 70 ஆயிரத்து 114 எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் 2.7 கிராம் மெத்தாம்பேட்டமைன் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் மலேசிய விமானி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எக்ஸ்-ரே சோதனையில் அவரது பயணப்பெட்டியில் இருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அந்நாட்டு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இயக்குநர் ஈக்கோ ஹாதி சண்டோசோ தெரிவித்துள்ளார்.

மேலும், விசாரணையில், 50,000 ரிங்கிட் பணத்திற்காக ஜகார்த்தாவிற்கு போதைப்பொருள் கடத்தியதாகவும், இதற்கு முன்பும் ஜகார்த்தா மற்றும் சபா பகுதிகளுக்கு போதைப்பொருள் கடத்தியதையும் அவ்விமானி ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மெத்தாம்பேட்டமைன், எக்ஸ்டசி மற்றும் கொக்கெயின் போதைப்பொருட்களை பயன்படுத்தியிருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News