Mar 25, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு கல்லறையல் பாலியல் செயலில் ஈடுபட்டது : ஜோடி மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பினாங்கு கல்லறையல் பாலியல் செயலில் ஈடுபட்டது : ஜோடி மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Share:

ஜார்ஜ்டவுன், மார்ச்.25-

பினாங்கில் உள்ள சீனக் கல்லறை ஒன்றில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்ட ஆணும் பெண்ணும் நாளை ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர்.

37 வயது பெண்ணும், 58 வயது ஆணும் பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றவியல் சட்டம் 377D- பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்படவிருக்கிறது.

பொது இடத்திலோ அல்லது தனிமையிலோ ஒழுங்கீனமாக நடந்து கொள்வதைக் குற்றமாகக் கருதும் இப்பிரிவின் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

சீனக் கல்லறை ஒன்றில் இந்த ஜோடி ஆபாச செயலில் ஈடுபடும் காணொளி ஒன்று அண்மையில் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, பினாங்கில் ஓர் ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டதை வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரோஸாக் முஹமட் உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, இவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் மூன்று நாள் தடுப்புக் காவல் அனுமதியை நீதிமன்றத்தில் பெற்றிருந்தனர்.

Related News

வெப்பமான வானிலை: மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விளையாட்டு உடைகளை அணிய அனுமதி

வெப்பமான வானிலை: மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விளையாட்டு உடைகளை அணிய அனுமதி

கார்ப்பரேட் மாஃபியா ஊழல்: 'மிஸ்டர் ஆர்' (Mr. R) நான் அல்ல; என்னிடம் எந்தப் பங்குகளும் இல்லை – டத்தோ ஸ்ரீ ரமணன் மறுப்பு

கார்ப்பரேட் மாஃபியா ஊழல்: 'மிஸ்டர் ஆர்' (Mr. R) நான் அல்ல; என்னிடம் எந்தப் பங்குகளும் இல்லை – டத்தோ ஸ்ரீ ரமணன் மறுப்பு

கெந்திங் மலைச் சாலைக் கட்டண முறை: ஏப்ரல் 2 முதல் வெள்ளோட்டம் தொடக்கம்

கெந்திங் மலைச் சாலைக் கட்டண முறை: ஏப்ரல் 2 முதல் வெள்ளோட்டம் தொடக்கம்

நீலாய் அஸ்திக் கலசத் திருட்டு: 4 கலசங்கள் மீட்பு, 10 பேரிடம் விசாரணை

நீலாய் அஸ்திக் கலசத் திருட்டு: 4 கலசங்கள் மீட்பு, 10 பேரிடம் விசாரணை

கொலை வழக்கில் முதியோர் இல்ல ஊழியரின் சிறைத் தண்டனை குறைக்கப்பட்டது

கொலை வழக்கில் முதியோர் இல்ல ஊழியரின் சிறைத் தண்டனை குறைக்கப்பட்டது

மத்தியக் கிழக்கில் நீடித்து வரும் மோதல்: விளைவுகளை எதிர்கொள்ள மலேசியா தயாராக வேண்டும் - தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவிப்பு

மத்தியக் கிழக்கில் நீடித்து வரும் மோதல்: விளைவுகளை எதிர்கொள்ள மலேசியா தயாராக வேண்டும் - தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவிப்பு