Jul 27, 2026
Thisaigal NewsYouTube
காப்பார் முன்னாள் எம்.பி. மாணிக்கவாசகத்திற்கு எதிரான தண்டனை மற்றும் அபராதம் ரத்து
தற்போதைய செய்திகள்

காப்பார் முன்னாள் எம்.பி. மாணிக்கவாசகத்திற்கு எதிரான தண்டனை மற்றும் அபராதம் ரத்து

Share:

ஷாஹ் அலாம், மார்ச் 22.

நபர் ஒருவரை நோக்கி அவதூறான சொல்லை பயன்படுத்திய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட காப்பார் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் S. மாணிக்கவாசகத்திற்கு எதிரான தண்டனை ரத்து செய்யப்பட்டது.

அதேவேளையில் மாணிக்கவாசகத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட 100 வெள்ளி அபராதம், ரத்து செய்யப்பட்டதுடன், அந்த 100 வெள்ளி தொகையை அவரிடமே திருப்ப ஒப்படைக்கும்படி ஷா ஆலாம் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

மாணிக்கவாசகம் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு அவருக்கு 100 வெள்ளி அபராதம் விதித்து இருக்கும் ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, சமர்ப்பிக்கப்பட்ட மேல்முறையீட்டில் அவருக்கு எதிரான தண்டனையையும், அபராதத் தொகையையும் ரத்து செய்வதாக நீதிபதி அஸ்லாம் சய்ண்ணுடின் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

மாணிக்கவாசகம், அவதூறான வார்த்தையை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது மட்டுமின்றி ஆதாரமற்றது. அவருக்கு எதிராக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டில் குறைபாடு இருப்பதாக மாணிக்கவாசகத்தின் வழக்கறிஞர் மனோரகன் மலையாளம் உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

தீர்ப்புக்கு பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் செய்தியாளர்களிடம் பேசினார்.

தனக்கு எதிராக விதிக்கப்பட்ட அபராதத் தொகை வெறும் 100 வெள்ளி என்றாலும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து நீதி கேட்டு தாம் நடத்திய சட்டப் போராட்டத்திற்கு இன்று வெற்றி கிடைத்து இருப்பதாக அந்த முன்னாள் காப்பார் எம்.பி. மாணிக்கவாசகம் பெருமிதம் தெரிவித்துள்ளார் என்று மனோகரன் மலையாளம் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்