அம்பாங், ஏப்ரல் 29-
அம்பாங், தாமான் புத்ரா-வில் எரிவாயு கொள்கலனை தூக்குவதற்கு மறுத்ததால் பொருள் அனுப்புநர் ஒருவர் அடித்து காயப்படுத்தப்பட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணியளவில் பாதிக்கப்பட்ட 36 வயது ஆடவர் எரிவாயு கொள்கலனை எடுத்துச் செல்லும் போது தவறுதலாக சம்பந்தப்பட்ட நபர் மீது மோதியதாகவும், எரிவாயு கொள்கலனை மோட்டார் சைக்கிளில் வைப்பதற்கு அந்நபர் உத்தரவிட்ட போது அதை பாதிக்கப்பட்டவர் மறுத்ததாகவும் தெரியப்படுகிறது.
பின்னர், ஆத்திரமடைந்த அந்நபர் தலை கவசத்தை கொண்டு பாதிக்கப்பட்டவரை அடித்து காயப்படுத்தியதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென் கொமிசியோனிற் முகமட் அசாம் இஸ்மாயில் கூறினார்.
இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 427 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் கைது செய்யப்பட்ட சந்தேகிக்கும் நபர் நான்கு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக முகமட் அசாம் விவரித்தார்.








