கோலாலம்பூர், மே 02-
நாடு முழுவதும் நேற்று பதிவாகியுள்ள சாலை விபத்துக்களின் மொத்த எண்ணிக்கை 1,445 ஆக குறைந்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை சாலை விபத்துக்களின் மொத்த எண்ணிக்கை 1,894 ஆக இருந்த வேளை நேற்று மட்டுமே 450 விபத்துக்களாக குறைந்திருப்பதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறையின் இயக்குநர் டத்தோ முகமட் நஸ்ரி ஓமர் கூறினார்.
சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக பதிவாகியிருப்பதாக Mohd Nasri தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக இருந்த வேளை 6 விபத்துக்களாக நேற்று குறைந்திருப்பதாக தெரியப்படுகிறது.








