Mar 20, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னர் தம்பதியருக்கு மகத்தான வரவேற்பு
தற்போதைய செய்திகள்

மாமன்னர் தம்பதியருக்கு மகத்தான வரவேற்பு

Share:

அண்டை நாடான சிங்கப்பூருக்கு இரண்டு நாள் அதிகாரத்துவ வருகையை மேற்கொண்டுள்ள மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கும், பேரரசியார் ராஜா ஜரித் சோபியா-விற்கும் அக்குடியரசு இன்று மகத்தான வரவேற்பை நல்கியது.

காலை 10.45 மணியளவில் சிங்கப்பூரை சென்றடைந்த மாமன்னரையும், பேரரசியாரையும் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னமும், அவரின் துணைவியார் ஜேன் இட்டோகியும் வரவேற்றனர்.

இவ்வருகையின் போது மாமன்னருடன் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மற்றும் சிங்கப்பூருக்கான மலேசியத் தூதர் அஸ்பர் முகமது முஸ்தபர் காணப்பட்டனர்.

இந்த வரவேற்பு நிகழ்விற்கு பின்னர் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், சிங்கப்பூர் அமைச்சர்களான வெளிறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தக, தொழிலியல் அமைச்சர் கன் கிம் யோங் மற்றும் சமூக, குடும்ப மேம்பாட்டுத்துறை அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி ஆகியோருடன் சந்திப்பு நடத்தினார்.

முன்னதாக, சிங்கப்பூர் இஸ்தானாவில் நடைபெற்ற மரியாதை அணிவகுப்பை மாமன்னர் பார்வையிட்டார்.

நாட்டின் 17 ஆவது மாமன்னராக கடந்த ஜனவரி 31 ஆம் தேதி பொறுப்பேற்றதிலிருந்து சுல்தான் இப்ராஹிம் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து