May 22, 2026
Thisaigal NewsYouTube
கோலகுபு பாரு சட்டமன்றத்தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர் குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை, பிரதமர் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

கோலகுபு பாரு சட்டமன்றத்தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர் குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை, பிரதமர் கூறுகிறார்

Share:

கோலகுபு பாரு, ஏப்ரல் 12-

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர் குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இன்று பத்தாங் காலிக்கு தாம் மேற்கொண்ட வருகையானது, பொது மக்களை சந்திக்கும் நோக்கத்தை கொண்டதாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

டிஏபி- யைச் சேர்ந்த கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் கடந்த மார்ச் 21 ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் வரும் மே 11 தேதி இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்த இடைத் தேர்தலில் டிஏபி சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் குறித்து முடிவு செய்வதற்கு பக்காத்தான் ஹராப்பான் உச்சமன்றக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று டிஏபி-யின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் கோபிந்த் சிங் டியோ கடந்த வாரம் தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக பிரதமர் அன்வாரிடம் கேட்ட போது, இன்னும் விவாதிக்கப்படவில்லை என்றார்.

Related News

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு