Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கோலகுபு பாரு சட்டமன்றத்தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர் குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை, பிரதமர் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

கோலகுபு பாரு சட்டமன்றத்தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர் குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை, பிரதமர் கூறுகிறார்

Share:

கோலகுபு பாரு, ஏப்ரல் 12-

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர் குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இன்று பத்தாங் காலிக்கு தாம் மேற்கொண்ட வருகையானது, பொது மக்களை சந்திக்கும் நோக்கத்தை கொண்டதாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

டிஏபி- யைச் சேர்ந்த கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் கடந்த மார்ச் 21 ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் வரும் மே 11 தேதி இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்த இடைத் தேர்தலில் டிஏபி சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் குறித்து முடிவு செய்வதற்கு பக்காத்தான் ஹராப்பான் உச்சமன்றக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று டிஏபி-யின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் கோபிந்த் சிங் டியோ கடந்த வாரம் தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக பிரதமர் அன்வாரிடம் கேட்ட போது, இன்னும் விவாதிக்கப்படவில்லை என்றார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்