Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி தங்குமிடங்களில் வார்டன்-களாக செயல்பட முன்னாள் இராணுவ வீரர்கள் விருப்பம்
தற்போதைய செய்திகள்

பள்ளி தங்குமிடங்களில் வார்டன்-களாக செயல்பட முன்னாள் இராணுவ வீரர்கள் விருப்பம்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 01 -

தங்குமிட வசதிகளை கொண்ட பள்ளிகளில், வார்டன் எனப்படும் கண்காணிப்பாளர் பொறுப்புக்கு ஆசிரியர்களுக்கு பதிலாக இதர தரப்பினரை நியமிப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக, கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் கூறியிருந்தார்.

பள்ளி தங்குமிட கண்காணிப்பாளராகும் வாய்ப்பை கல்வி அமைச்சு தங்களுக்கு வழங்க வேண்டுமென முன்னாள் இராணுவ வீரர்கள் சங்கத்தின் தலைவர் ஷாஹ்ருட்டின் ஒமார் கோரிக்கை விடுத்தார்.

பள்ளி மாணவர்களை வழிநடத்துவதற்கு சம்பந்தப்பட்ட முன்னாள் இராணுவ வீரர்கள் ஏற்புடையவர்களாக இருப்பார்கள். இராணுவ வீரர்களாக பணியாற்றிய போது, அத்தரப்பினர் ஒழுக்கத்தை பேணியதோடு, போதிய பயிற்சிகளையும் பெற்றுள்ளனர்.

வார்டன் -களாகும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டால், 40 வயதில் பணி ஓய்வு பெறும் அவர்களுக்கு அதுவொரு இரண்டாவது வேலை வாய்ப்பாக அமையும் என்றாரவர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்