May 22, 2026
Thisaigal NewsYouTube
ஆற்றில் விழுந்த AUTISME குறைபாடுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

ஆற்றில் விழுந்த AUTISME குறைபாடுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்

Share:

ஜொகூர் பாரு, மே 02-

ஜொகூர் பாரு, கம்போங் செப்பாக்காட் பாரு அருகேயுள்ள ஸ்குடாய் ஆற்றில் நேற்று தவறி விழுந்த AUTISME குறைபாடுடைய 5 வயது சிறுவன், சடலமாக மீட்கப்பட்டார்.

நேற்று மாலை மணி 5.59 அளவில், கிடைக்கப்பெற்ற அழைப்பை தொடர்ந்து, ஸ்குடாய் தீயணைப்பு மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 7 தீயணைப்பு வீரர்கள், மீட்பு கருவிகளுடன், சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ஆற்றோரத்தில்அச்சிறுவன் விழுந்ததாக கூறப்படும் 4 மீட்டர் ஆழமான பகுதியிலிருந்து சுமார் 800 மீட்டர் தூரம் வரையில், மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இரவு மணி 11.15 அளவில், அச்சிறுவன் விழுந்த இடத்திலிருந்து, சுமார் 130 மீட்டர் தூரத்தில், அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தீயணைப்பு மீட்பு படையின் மூத்த தலைமை அதிகாரி சைஃபுல்பஹ்ரி சஃபார் தெரிவித்தார்.

Related News