Mar 19, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் வன்கொடுமை தொடர்பில் ஆசிரியர் கைது
தற்போதைய செய்திகள்

பாலியல் வன்கொடுமை தொடர்பில் ஆசிரியர் கைது

Share:

பெட்டலிங் ஜெயா, ஏப்ரல் 7 -

கோத்தா டாமான்சாராவில் மாணவர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 27 வயதுடைய ஆசிரியரை போலீசார் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் ஆசிரியர் வருகின்ற ஏப்ரல் 10 ஆம் தேதி வரையில் ரிமாண்ட்டில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பெட்டலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி ஷாஹாருல்நிசான் ஜாபார் தெரிவித்தார்.

இச்சம்பவம் கடந்த மார்ச் 22 ஆம் தேதி ஓர் பேரங்காடியில் உள்ள கழிப்பறையில் நிகழ்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட மாணவர் கடந்த வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக ஷாஹாருல்னிசாம் மேலும் கூறினார்.

Related News