Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களின் பாட போதிப்பு நேர விவகாரத்தில் உயர்கல்வி அமைச்சு தலையிடக்கூடாது.
தற்போதைய செய்திகள்

பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களின் பாட போதிப்பு நேர விவகாரத்தில் உயர்கல்வி அமைச்சு தலையிடக்கூடாது.

Share:

பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களுக்கான மொத்த பாட நேரத்தை நிர்ணயிக்கும் விவகாரத்தில், புதிய கொள்கையை ஏற்படுத்தி, கல்வி அமைச்சு தலையிடக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தங்களது விரிவுரையாளர்களின் பணி சுமைகளை நன்கு அறிந்துள்ள பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தினரிடம், அவ்விவகாரம் விடப்பட வேண்டும்.

அவர்களுக்கு தேவையான சிறந்த அணுகுமுறைகளை, பல்கலைக்கழக நிர்வாகத்தினரே ஏற்படுத்தி தருவார்கள் என தேசிய பேராசிரியர் மன்றத்தின் தலைவர் எமரிட்டஸ் பேராசிரியர் டத்தோ டாக்டர் ராடுவான் சே ரோஸ் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களின் மொத்த பாட நேரத்தை சீர்படுத்துவதற்கான தேவை குறித்து ஆராயப்பட்டு வருவதாக உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜாம்ப்ரி அப்துல் கதிர் கடந்த செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார்

நடப்பில், விரிவுரையாளர்களுக்கான மொத்த பாட நேரம், சராசரியாக வாரத்திற்கு 18 மணி நேரமாக உள்ளது. அத்தரப்பினருக்கு வேறு முக்கிய பொறுப்புகளும் உள்ளதால், அவர்களுக்கு அது பெருஞ்சுமையாக உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

அதனை மேற்கோள்காட்டி அவ்வாறு கருத்துரைத்த ராடுவான் சே ரோஸ், ஒவ்வொரு பல்கலைக்கழங்களிலும் கற்றல் கற்பித்தல் முறை மாறுபடுவதால், அதில் அமைச்சு தலையிடக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு