May 22, 2026
Thisaigal NewsYouTube
பெரியவரை பிளாஸ்டிக் நாற்காலியால் அடித்து கொள்ளையிட்ட நபர்
தற்போதைய செய்திகள்

பெரியவரை பிளாஸ்டிக் நாற்காலியால் அடித்து கொள்ளையிட்ட நபர்

Share:

மலாக்கா, ஏப்ரல் 25-

மலாக்கா, மெர்லிமாவ், கம்பொங் ஆயர் தவார்- ரில் உள்ள ஒரு வீட்டில் பெரியவர் ஒருவரை பிளாஸ்டிக் நாற்காலியால் அடித்து அவரிடம் கொள்ளையிட்டு சென்ற ஆடவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்று காலை 9:30 மணியளவில் 61 வயதுடைய அந்த பெரியவர் தனது வீட்டின் பின் கதவுக்கு அருகில் தனியாக படுத்திருந்ததாகவும், தலை கவசம் மற்றும் முகமூடி அணிந்திருந்த நபர் ஒருவர் பாதிக்கப்பட்டவரின் முகத்தில் மிளகாய் சாந்தை ஊற்றி, நாற்காலியால் தாக்கியதுடன் வீட்டில் கொள்ளையிட்டு சென்றதாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கண்காணிப்பாளர் அஹ்மத் ஜமில் ரட்ஸி தெரிவித்தார்.

சந்தேகிக்கும் 30 வயதுடைய அவ்வாடவர் தப்பிச் செல்வதற்கு முன்பாக பாதிக்கப்பட்டவரிடம் 400 வெள்ளி ரொக்கப்பணம், நான்கு ஏ.டி.எம் கார்டுகள் ஓட்டுநர் உரிமம் உட்பட அடையாள அட்டையையும் கொள்ளையிட்டு சென்றதாக ஜமில் ரட்ஸி கூறினார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 394 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் சம்பந்தப்பட்ட ஆடவரை பிடிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக ஜமில் ரட்ஸி மேலும் அறிவித்தார்.

Related News