Mar 18, 2026
Thisaigal NewsYouTube
கனரக இயந்திரத்தில் அரைப்பட்டு லோரி ஓட்டுநர் பலி
தற்போதைய செய்திகள்

கனரக இயந்திரத்தில் அரைப்பட்டு லோரி ஓட்டுநர் பலி

Share:

ஜேராந்துட், மார்ச் 9 -

லோரியில் வெட்டுமரங்களை ஏற்றும் நடவடிக்கையின் போது கனரக இயந்திரத்தின் சக்கரத்தில் அரைப்பட்டு லோரி ஓட்டுநர் பரிதாபமாக மாண்டார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் பகாங், ஜாலான் ஜெராந்துட் பாடாங் பியோல் சாலையின் 26 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

கோல லிப்பிஸை சேர்ந்த 41 வயதுசைபுல்னிசாம் சாக்காரியா என்ற லோரி ஓட்டுநரே இச்சம்பவத்தில் மாண்டதாக ஜேராந்துட் மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்மான் மாட் காமிஸ் தெரிவித்தார்.

கனரக இயந்திரம் வெட்டுமரங்களை லோரியில் ஏற்றியப்பின்னர் அந்த வெட்டு மரங்களை சங்கிலியால் பிணைக்கும் பணியில் லோரி ஓட்டுநர் ஈடுபட்டுக்கொண்டு இருந்த போது கால் இடறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

வெட்டுமரங்களை சங்கிலியால் பிணைக்கும் நடவடிக்கை முடிந்து விட்டது என்று கருதிய கனரக இயந்திர ஓட்டுநர், வெட்டுமரங்ங்கள் மீதான இயந்திரத்தின் பிடியை தளர்த்தி, இயந்திரத்தை பின்நோக்கி நகர்த்திய போது கீழே விழுந்து கிடந்த லோரி ஓட்டுநர் மீது சக்கரம் ஏற்றியதாக அஸ்மான் மாட் காமிஸ் தெரிவித்தார்.

Related News

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்