சபாவின் முதல் பெண் முன்னாள் துணை முதல்வருமான Datuk Ariah Tengku Ahmad தமது 86 ஆவது வயதில் இன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
தமது வாழ்நாள் முழுவதும் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு சேவையாற்றி வந்த Ariah Tengku - வின் மறைவு நாட்டிற்கு மட்டுமின்றி தமது குடும்பத்திற்கும் பெரிய இழப்பாகும் என்று அவரின் மகளும் சபாவின் பிரபல வழக்கறிஞருமான Tengku Datuk Fuad Tengku Ahmad கூறினார்.
மறைந்த Ariah Tengku என்பவர் Jesselton Athletics கேப்டனாக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி, கடந்த 1956 ஆம் ஆண்டில் Miss Jesselton என்றும் அவருக்கு முடிசூட்டப்பட்டது.
ஒரு சிறந்த வானொலி தொகுப்பாளர், பத்திரிக்கையாளர், கடந்த 1986 முதல் 1995 ஆம் ஆண்டு வரையில் Kawang மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சமூக சேவைத் துறையில் அமைச்சராக இருந்ததுடன் சபாவின் முதல் பெண் துணை முதல்வராகவும் அவர் பணியாற்றி வந்துள்ளார்.








