Dec 2, 2025
Thisaigal NewsYouTube
நடப்பு அரசாங்கம் வலுவுடன் இருக்கிறது
தற்போதைய செய்திகள்

நடப்பு அரசாங்கம் வலுவுடன் இருக்கிறது

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், வலுவுடன் இருப்பதாக ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார். நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும், ஒற்றுமை அரசாங்கத்தை நிலைத்தன்மையுடன் வலுப்படுத்த வேண்டும் என்ற உணர்வை ஆளும் கட்சி எம்.பி.க்கள் மத்தியில் விதைக்கவே உதவும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார். அன்வார் தலைமையிலான அரசை வலுப்படுத்த வேண்டும் என்பதில் உறுப்புக்கட்சிகள் திடமான உறுதிபாட்டில் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News