மலேசியாவில் மிக முதிய யானை என்று போற்றப்பட்டு வந்த 86 வயதுடைய லோக்மாலா என்ற யானை, முதுமை காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை இறந்தது. இந்த யானை கடந்த 1974 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 22 ஆம் தேதி இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசத்திற்கும், பூட்டானுக்கும் இடையில் உள்ள அஸாம் மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாகும்.
பகாங், லஞ்சாங்கில் உள்ள யானை சரணாலயத்தில் இந்த லோக்மாலா யானை பாதுகாக்கப்பட்டு வந்தது. சரணாலயத்திற்கு கொண்டு வரப்படும் காட்டு யானைகளை பழக்கப்படுத்துவதற்கு கும்கி யானையாக லோக்மாலா பயன்படுத்தப்பட்டு வந்ததாக அந்த சரணாலயத்தின் தலைவர் சே கு முகமட் சம்சூரி தெரிவித்தார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


