மலேசியாவில் மிக முதிய யானை என்று போற்றப்பட்டு வந்த 86 வயதுடைய லோக்மாலா என்ற யானை, முதுமை காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை இறந்தது. இந்த யானை கடந்த 1974 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 22 ஆம் தேதி இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசத்திற்கும், பூட்டானுக்கும் இடையில் உள்ள அஸாம் மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாகும்.
பகாங், லஞ்சாங்கில் உள்ள யானை சரணாலயத்தில் இந்த லோக்மாலா யானை பாதுகாக்கப்பட்டு வந்தது. சரணாலயத்திற்கு கொண்டு வரப்படும் காட்டு யானைகளை பழக்கப்படுத்துவதற்கு கும்கி யானையாக லோக்மாலா பயன்படுத்தப்பட்டு வந்ததாக அந்த சரணாலயத்தின் தலைவர் சே கு முகமட் சம்சூரி தெரிவித்தார்.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்


