நான்கு நண்பர்கள் உணவகத்தில் மகிழ்ச்சியில் திளைந்திருந்தப் பின்னர் வீடு திரும்ப முற்பட்ட போது அவர்களின் வாகனம், வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயத்திற்கு ஆளாகினர்.
இச்சம்பவம் நேற்று அதிகாலை 4.15 மணியளவில் கிள்ளான், ஜாலான் மெரு அருகில் நிகழ்ந்தது. 22 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நான்கு இளைஞர்கள் கோலாலம்பூரில் உணவருந்தி விட்டு, கிள்ளான் கம்போங் ஜாவாவை நோக்கி காரில் வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எஸ். விஜயராவ் தெரிவித்தார்.
அந்த நால்வர் பயணித்த புரோடுவா பெஸ்ஸா கார், சாலைத் தடுப்பை மோதி, இரண்டு முறை சுழன்று கவிந்ததில் அதன் ஓட்டுநர் வெளியே தூக்கி எறிப்பட்டதுடன், மற்றொருவர் காரின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்ததாக ஏசிபி விஜயராவ் குறிப்பிட்டார்.








