சபா, சரவாக்கில் உள்ள உயர் கல்விக்கூடங்களில் பயிலும் தீபகற்ப மலேசியாவில் உள்ள மாணவர்களுக்கு உள்ளூர் விமானக் கட்டணத்தில் 300 வெள்ளி மானியம் வழங்கும் உதவித் திட்டம் இன்று மீண்டும் தொடங்கியது என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
உயர் கல்வி அமைச்சின் கீழ் உள்ள பொது பல்லைக்கழகங்கள், போலி டெக்னிக் கல்லூரிகள், சமூக கல்லூரிகள், மெட்ரிகுலோஷன் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கழங்கங்கள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் விமானக் கட்டணத்திற்கான இந்த உதவித் தொகையை இன்று முதல் பெறலாம் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.








